பிடித்தவை 10- கவிஞர் ஆனந்தி ராமகிருஷ்ணன்


கா.சு.வேலாயுதன்

கடலூர் மாவட்டம் வடலூரில் வசிப்பவர் கவிஞர் ஆனந்தி ராமகிருஷ்ணன். தினசரிகள், அவற்றின் இணைப்பிதழ்கள், இலக்கியச் சிற்றிதழ்கள், பல்வேறு இணைய இதழ்களிலும் கவிதை, கட்டுரை, நகைச்சுவை, துணுக்கு என எழுதிக்குவிப்பவர். ‘நினைவிலிருந்து எரியும் மெழுகு’ என்ற கவிதைத் தொகுப்பு இவரின் சமீபத்திய உருவாக்கம். அவருக்குப் பிடித்தவை பத்து இங்கே:

பிடித்த கவிதை: ‘அழுகை வராமல் இல்லை; ஒரு வைராக்கியம் உங்கள் முன்னால் அழக்கூடாது!’ என்னும் மனுஷ்யபுத்திரனின் வரிகள்.

மனிதர்கள்: எனது எல்லா முயற்சிகளுக்கும் தலைகோதி ஆசிர்வதித்து, ஆரவாரமின்றி பெருமை பாராட்டும் எனது அப்பாவும், அம்மாவும்! என்னைப் பொறுத்தவரை எனக்கு அவர்கள் உலக அதிசயங்களுக்கு எல்லாம் மேலானவர்கள்.

x