”மோடி சாமியாராகி இமயமலைக்கு ஓடிவிடவேண்டும்”- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தடாலடி பேட்டி


கே.கே.மகேஷ்

துணிச்சலுக்குப் பெயர் போனவர் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். தடாலடி பேச்சுகள் மூலம் தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றொரு கட்சியும் உயிர்ப்போடு இருக்கிறது என்று காட்டிக்கொண்டிருந்தவர். ஜெயலலிதாவை ‘கோமளவல்லி’ என்றும், சசிகலாவை ‘லேடி கேங்ஸ்டர்’என்று சொன்னதோடு நில்லாமல்... மறைந்த தலைவர் கருணாநிதிக்கு எதிராகவும் கடுமையாக எதிர்ப்பு அரசியல் செய்தவர். அப்படிப்பட்டவருக்கு, தான் வகித்த அதே தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் யாரையும் பகைத்துக்கொள்ளாமல் ‘அமைதி’யாக இருக்கிற திருநாவுக்கரசரைப் பார்த்து சிரிப்பு வருகிறது. அவரிடம் அறிக்கை வம்பு செய்வதை வழக்கமாக வைத்திருக்கும் இளங்கோவன் இங்கே நம்முடன் பேசுகிறார்...

ஜெயலலிதாவின் இயற்பெயர் ‘கோமளவல்லி’ என்பதை தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு முதலில் எடுத்துச் சொன்னவர் நீங்கள். ஆனால், அப்படியொரு பெயரே ஜெயலலிதாவுக்குக் கிடையாது என்று தினகரன் மறுத்திருக்கிறாரே?

தினகரன் வழக்கம்போல முழுக்க முழுக்கப் பொய் சொல்கிறார். கோமளவல்லி என்பதுதான் ஜெயலலிதாவின் உண்மையான பெயர். இதை அவரே சொல்லியிருக்கிறார். தன் சுய சரிதையைக் குமுதத்தில் பாதி எழுதி, பாதியில் விட்டார் அல்லவா? அதில் அவரே அதைக் குறிப்பிட்டுள்ளார்.
    
‘சர்கார்’ படம் பார்த்தீர்களா? தமிழக அரசு வழங்கும் விலையில்லா பொருட்களைத் தீயிட்டுக் கொளுத்துவது பற்றி உங்கள் கருத்தென்ன?

x