அரியநாச்சி 15 - வேல ராமமூர்த்தி


அருவாள் எதுக்கு?

“வெள்ளாங்குளத்துச் சக்கரையும் அவரு தம்பி சோலையும் கல்யாணத்துக்கு வருவாங்களான்னு சும்மாதான் கேட்டேன்” கைச் சாராயத்தை வாய் எடுக்காமல் முழுங்கினான் கேசவன்.

கள்ளராமனுக்கு போதை, போன போக்கு தெரியலெ. கேசவனையே பார்த்துக்கொண்டிருந்தான்.

லோட்டாவுக்கு, ஓசி சாராயத்தை ஊத்திக்கொடுத்து முடியலே. கடைக்கு உள்ளேயும் வெளியேயும் போதைச் சத்தம் கிழியுது.

x