மந்திரியா... மந்திரியா...?- மலைக்கோட்டை அதிமுக மல்லுக்கட்டு!


கரு.முத்து

திருச்சி அதிமுக அரசியல் கடந்த சில மாதங்களாகவே களேபரமாகிக் கிடக்கிறது. அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் மாவட்டச் செயலாளரும் எம்பி-யுமான குமாரும்தான் இந்தக் களேபரத்துக்கான காரண புருஷர்கள்!

இதற்கு முன்பு வெல்லமண்டி நடராஜன்தான் இங்கே மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். “உடல் நிலை சரியில்லாததால் அமைச்சராகவும் செயலாளராகவும் பணிகளை இழுத்துப் போட்டுக் கவனிக்க முடியாது” என்று சொல்லி கடந்த சில மாதங்களுக்கு முன், தாமே முன்வந்து மாவட்டச் செயலாளர் பதவியை குமாருக்கு விட்டுக் கொடுத்தார் வெல்லமண்டி. அதிலிருந்தே இருவருக்கும் இடையில் புகைச்சலும் வட்டம் போட ஆரம்பித்துவிட்டது.

ஒரு காலத்தில் மாவட்டச் செயலாளர், அமைச்சர் என இரட்டை அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த வெல்லமண்டியின் செல்வாக்கை கடந்த சிலமாதங்களில் கணிசமாக சரித்திருக்கிறது குமார் கோஷ்டி. குமாரோடு மல்லுக்கட்ட முடியாத வெல்லமண்டி இப்போது, தனது திருச்சி கிழக்குத் தொகுதியையாவது தக்கவைக்கப் பார்ப்போம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

x