இது  அக்பர்  வீட்டுத் தீபாவளி!


கா.சு.வேலாயுதன்

“அக்பர்''
``சொல்லுங்க ஜி..!”
“இந்த தீபாவளிக்குப் பொண்ணு ஊருக்கு வருமா?”
“அப்புறம் வராம... அவ இல்லாம தீபாவளியா?”
“அப்ப இந்த வருஷமும் உங்க வீட்ல தீபாவளி களைகட்டும்?”

- இது எனக்கும் எழுத்தாளர் அக்பருக்கும் போனவாரம் நடந்த உரையாடல். என்னடா... அக்பர்ன்றான் தீபாவளின்றான்னு உங்களுக்கெல்லாம் ஒரே குழப்பமா இருக்குல்ல... மூளையைப் போட்டு ரொம்பக் கசக்கிக்காம மேற்கொண்டும் படிங்க.

பொள்ளாச்சியைச் சேர்ந்த இந்த அக்பர் ஒரு இஸ்லா மியர். இவரது மனைவி பிரேமா இந்து. இவர்கள் இருவரும் காதலித்துக் கரம்பிடித்து 25 ஆண்டுகள் ஓடி விட்டன. அக்பர் எழுத்தாளர். தனது பெயரின் முதல் எழுத்தையும் தனது மனைவியின் பெயரின் முதல் எழுத்தையும் கொண்டு, ‘பொள்ளாச்சி அபி’ என்ற பெயரில் பத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதுபவர். ‘ஆதலினால் காதலித்தேன்!’ என்ற நாவலுக்கும் ‘எங்கேயும், எப்போதும்!’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கும் சொந்தக்காரர். மனைவி பிரேமா பள்ளி ஆசிரியை.

x