உங்கள் குழந்தைகளுக்கு மன உளைச்சலா?- மீட்பதற்கு சில வழிகள்


பி.எம்.சுதிர்

ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத காலம் என்றால் அது அவர்களின் பள்ளிப் பருவமாகத்தான் இருக்கும். “நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்ததே பள்ளிக் காலத்தில்தான். எந்தக் கவலையும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றித் திரிந்த அந்த நாட்களை மறக்கவே முடியாது” என்று பலரும் நெஞ்சம் கனக்க பெருமூச்சு விட்டபடி சொல்வதைக் கேட்டிருப்போம்.

ஆனால், இதெல்லாம் பள்ளிக்காலத்தை முடித்தவர்களின் மலரும் நினைவுகள். அதேநேரம் பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் கேட்டால், தங்களைப் போல் கஷ்டப்படும் ஜீவன்களே இல்லை என்று புலம்புவார்கள். மழை பெய்யாதா, பள்ளிக்கு விடுமுறை கிடைக்காதா என்று ஏங்காத குழந்தைகளே இல்லை. அந்த அளவுக்குப் பள்ளிகளும் பாடங்களும் பல குழந்தைகளுக்கு  மன உளைச்சலையும், அழுத்தத்தையும் தருகின்றன. இந்த நிலை உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

காலை உணவும் மனநிலையும்

x