காக்கிக்குள் கசிந்த ஈரம்


நம்மாழ்வார் பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் ஏற்கெனவே தந்தையைப் பறிகொடுத்தவர். தாயின் அரவணைப்பில் மயிலாப்பூர் விடுதியில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் முன்விரோதம் காரணமாக அவருடைய தாயும் கொலைசெய்யப்பட்டார்.

இதையடுத்து அநாதவராக நின்ற கார்த்திக்கின் நிலை கண்டு தூக்கத்தைத் தொலைத்தார் இந்தக் கொலை வழக்கை விசாரிக்க வந்த காவல் உதவி ஆணையர் பாலமுருகன்.

சிறுவனை அப்படியே விட மனமில்லாத அவர், தனது மனைவி, பிள்ளைகள் சம்மதத்துடன் கார்த்திக்கையும் தத்தெடுத்திருக்கிறார். இதை உடனடியாக கார்த்தியின் விடுதிக் காப்பாளருக்குத் தெரியப்படுத்திய பாலமுருகன், இப்போது கார்த்திக்கையும் தனது பிள்ளைகளில் ஒருவனாக அங்கீகரித்திருக்கிறார். காவல் துறையினர் பற்றி என்னதான் எதிர்மறைக் கருத்துகள் பரப்பப்பட்டாலும் பாலமுருகன் போன்றவர்களும் அந்தத் துறையில் இருக்கிறார்கள் என்பது அவ்வப்போது நிரூபிக்கப்பட்டும் வருகிறது. 

x