என்னம்மா இப்புடி பண்ணீட்டீங்களேம்மா..!


கடந்த வாரம் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசையும், தூத்துக்குடி மாணவி சோபியாவும் தான் உலக ட்ரெண்ட். விமானத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் போதே. “பாசிச பாஜக ஒழிக” என்று தமிழிசையைப் பார்த்து மாணவி லூயிஸ் சோபியா கோஷமிட, தமிழிசை சினம்கொண்டு போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து, சோபியா கைது செய்யப் பட்டார். விஷயம் தீயாய் இணையத்தில் பரவியது. சோபியாவுக்கு ஆதரவாகவும் தமிழிசைக்கு ஆதரவாகவும் விவாதங்கள் பறந்தன. இருவரையும் விமர்சித்து மீம்களும் குவிந்தன. அவற்றில், `மோடி தமிழிசையிடம் - நூறு பேரோட முடிய வேண்டிய விஷயத்தை, நூறு கோடி பேருக்கும் பத்த வச்சிட்டியே’ என்ற மீம்தான் ஹைலைட்டாகி வைரலானது. 

காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்!”
- வைகோ

மகாபிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா..?
- சாட்டை.

தலைவர் கலைஞர் அவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்த வரும் லட்சம் பேரை கட்சியிலிருந்து நீக்குவார்களா?
- தயாநிதி அழகிரி 

x