படம் வரையும் பாண்டா


கொழுக் மொழுக்கென்று இருக்கும் பாண்டாக்களின் அசைவுகளும் சேட்டைகளும் கண்ணைக் கவரும். பொம்மைகளில்கூட பாண்டா பொம்மைகளுக்குதான் மவுசு அதிகம். இப்படியிருக்க, வியன்னாவில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் இருக்கும் பெண் பாண்டா கரடி இன்னும் ஒருபடி மேல் சென்று எல்லோரது மனதையும் கவர்ந்துள்ளது. காரணம், இந்தப் பெண் பாண்டா பிரமாதமாக ஓவியம் வரையும் திறமை கொண்டது. யாங் யாங் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பெண் பாண்டா எதேச்சையாக ஒரு நாள் பெயின்டிங் பிரஷ் எடுத்து கிறுக்கி விளையாடியிருக்கிறது. அப்புறம் பார்த்தால் அது கிறுக்கி வைத்திருந்தது கைதேர்ந்த ஓவியர் வரைந்த ஓவியம் போலவே இருந்தது.

தொடர்ந்து அதனை ஓவியம் வரைய வைத்திருக்கிறார்கள் பூங்கா நிர்வாகிகள். இதுவரை நூறு ஓவியங்களுக்கு மேல் வரைந்து தள்ளியிருக்கிறது இந்த பாண்டா. 

அந்த ஓவியங்கள் விற்பனையும் செய்யப்பட்டுவருகின்றன. இந்த பாண்டா, ஓவியம் வரையும் வீடியோக் கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. 

--------------------------------------------------

x