அனுஷ்காவால் வந்த அக்கப்போர்!


கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்காக இந்திய கிரிக்கெட் அணியினர் அண்மையில் லண்டன் சென்றனர். இவர்கள் கடந்த செவ்வாயன்று லண்டனிலுள்ள இந்திய தூதரகத்தில் மதிய விருந்துக்கு அழைக்கப்பட்டனர்.  அப்போது இந்திய அணியினர் எடுத்துக்கொண்ட குழு படத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது ட்விட்டரில் பகிர்ந்தது. இதை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து விமர்சித்து ட்ரெண்டாக்கினர்.

காரணம், அந்தப் படத்தில் பாலிவுட் நடிகையும் விராத் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா இடம்பெற்றிருந்ததுதான்.  ’இந்திய கிரிக்கெட் அணியின் குழு படத்தில் அனுஷ்கா ஏன் இருக்கிறார்... இதென்ன ஹனிமூனா... அப்படியானால் மற்ற வீரர்களின் மனைவிகள் எங்கே... உதவி கேப்டன் எங்கோ மூலையில் நிற்க அனுஷ்காவுக்கு மட்டும் ஏன் இந்த முக்கியத்துவம்?’ என்றெல்லாம் பலரும் கேள்விகளால் துளைத்தனர். இதனால் வெறுத்துப் போன விராட் ஒரு புகைப்படத்துக்கு இந்த அக்கப்போரா என்று காட்டமானது தனி கதை!

x