தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!


தங்கம்

இன்று காலை நேர விலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து 53,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அதுவும் ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டது. மே மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரணத் தங்கம்

கடந்த சனிக்கிழமை 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ.6,655க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,240க்கு விற்கப்பட்ட நிலையில், இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்துள்ள நிலையில், ஒரு சவரன் தங்கம் ரூ.520 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய காலை நேர விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 6,720 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கம் 53,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 57,520 ரூபாயாகவும், கிராம் ஒன்று 7,190 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

வெள்ளி

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் 1.50 காசுகள் உயர்ந்து 97.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து ஒரு கிலோ வெள்ளியின் விலை 97,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

x