புற்றுநோய் சிகிச்சை; இந்தியாவின் முதல் ஹீமோதெரபி மருந்து... பெங்களூருவில் தயார்!


இந்தியாவின் முதல் கீமோதெரபி மருந்தை பெங்களூரூவைச் சேர்ந்த டாடா மெமோரியல் சென்டர் மற்றும் ஐடிஆர்எஸ் லேப்ஸ் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் கேன்சரால் பாதிக்கப்பட்ட 10,000 குழந்தைகள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாட்டா மெமோரியல் ஹாஸ்பிடல்

புற்றுநோய் பாதித்தவர்களுக்கு புற்று செல்கள் மிக வேகமாக வளர்வதை தடுக்க ஹீமோதெரபி கொடுக்கப்படுகிறது. பெரும்பாலும் ஐ.வி மூலமாக நரம்புகள் வழியாகவே இந்த மருந்து கொடுக்கப்படும் நிலையில் குழந்தைகளுக்கு வாய் வழியாக கொடுக்கும் ஹீமோதெரபி மருந்தை பெங்களூரில் உள்ள டாடா மெமோரியல் சென்டர் மற்றும் ஐ டி ஆர் எஸ் லேப்ஸ் ஆகியவை இணைந்து பலவருட ஆராய்ச்சிக்குப் பின் கண்டறிந்துள்ளன. இது குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சையில் மிகப்பெரிய உதவியைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தப் புற்றுநோயை கட்டுப்படுத்த இதுபோன்ற வாய்வழி கொடுக்கப்படும் 6-MP மெர்கேப்டோப்யூரின் எனும் கீமோதெரபி மருந்து பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது அமெரிக்காவைத் தாண்டி வேறு நாடுகளில் அனுமதிக்கப்படவில்லை.

தற்போது முதல் முறையாக நிணநீர் ரத்த புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க மெர்கேப்டோப்யூரின் வகை மருந்து இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதலாவது மற்றும் ஒரே கீமோதெரபி மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுக்கு வாய்வழியாக திரவ வடிவில் வழங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மருந்தின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 10000 குழந்தைகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பவுடர் வடிவில் உள்ள இந்த மருந்தை திரவமாக்கி வாய்வழியாக வழங்குவதன் மூலம் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x