தீயணைப்புத் துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம்... இதுவே முதல் முறை!


தமிழ்நாடு தீயணைப்புத் துறையின் இணை இயக்குநா்என். பிரியா ரவிச்சந்திரன், தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மாநில அரசுப் பணியில் இருந்து 2022-ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ் பிரிவு அதிகாரியாக பிரியா தோவாகியுள்ளாா்.

தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் இணை இயக்குநராக பணியாற்றும் பெண் அதிகாரி பிரியா ரவிச்சந்திரன், மாநில அரசு அல்லாத சிவில் சர்வீசஸ் (Non state Civil service) ஒதுக்கீட்டிலிருந்து ஐஏஎஸ்ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2003-ம் ஆண்டு தமிழக அரசின் குரூப் 1 அதிகாரியாக பணியில் சேர்ந்த பிரியா ரவிச்சந்திரன், தீயணைப்புத் துறையில் பணியாற்றி, இணை இயக்குநர் நிலைக்கு அவர் உயா்ந்தாா்.

மாநில அரசின் பரிந்துரைப்படி ஆண்டுதோறும் காலியாக உள்ள குறிப்பிட்ட சில இடங்களுக்கு குரூப் 1 அதிகாரிகள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக நியமனம் செய்யப்படுவர். இந்த நடைமுறையின்படி, 2022-ம் ஆண்டு காலியாகவுள்ள இடத்துக்கு தீயணைப்புத் துறை இணை இயக்குநா் பிரியா ரவிச்சந்திரன் தோவாகியுள்ளாா்.

தீயணைப்புத் துறையில் இருந்து ஒருவா் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தோவாகியிருப்பது தமிழகத்தில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

x