வைரமுத்துவின் 'மகா கவிதை' நூல் வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்


கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள மகா கவிதை நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னையில் வெளியிடுகிறார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் கவிதைகளை படைத்துள்ள வைரமுத்து நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் வாழ்த்தி பேச உள்ளனர். மாலை 6 மணிக்கு இந்த விழா நடைபெறுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x