பொற்கோவிலின் தெய்வீக ஒளியில் மூழ்கி விட்டேன்... நடிகை ரம்யா பாண்டியன்!


நடிகை ரம்யா பாண்டியன்...

நடிகை ரம்யா பாண்டியன் ரிஷிகேஷ், பஞ்சாப் என ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார்.

நடிகர்கள் கீர்த்தி பாண்டியன் - அசோக் செல்வன் திருமணத்தை முடித்த கையோடு நடிகை ரம்யா பாண்டியன் சமீபத்தில் இமயமலை அருகே உள்ள ரிஷிகேஷ் சென்றார். இதனை அடுத்து தற்போது, பஞ்சாப் பொற்கோவிலுக்கு அவர் சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அவை தற்போது வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து அவர், ‘பொற்கோவிலின் தெய்வீக ஒளியில் மூழ்கி விட்டேன். ஒவ்வொரு அடியும் தங்கத்திலான ஆசீர்வாதமாக எனக்கு உணர்வை தருகிறது’ என நெகிழ்ந்துள்ளார். மேலும் பொற்கோவிலில் அவர் வழிபட்ட வீடியோவையும், புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

x