அதிரடியாக உயரும் தங்கத்தின் விலை... அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்


தங்கம்

நேற்று போன்று இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. இன்று சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 47 ஆயிரத்தை கடந்துள்ளது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,880 ரூபாயாகவும், ஒரு சவரன் 47,040 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் 5,895 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 47,160 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து, 6,365 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, 50,920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

தங்கம் விலை உயர்ந்து விற்பனையாகி வரும் நிலையில், வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்துள்ளது. கிராம் வெள்ளி 81 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 81,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

x