தாறுமாறாய் ஏறும் தங்கத்தின் விலை... ஒரே நாளில் சவரனுக்கு 840 ரூபாய் உயர்வு!


தங்கம்

சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 அதிகரித்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.840 அதிகரித்துள்ளது. இதனால் சவரன் 52,920 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 105 ரூபாய் அதிகரித்துள்ளதால், 6,615 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. திடீரென தங்கத்தின் விலை சவரன் 53 ஆயிரம் ரூபாயை நெருங்குவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வெள்ளி

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து கிராம் 87-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் வெள்ளி கிலோவுக்கு 2,000 ரூபாய் உயர்ந்து 87,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

ஓசூரில் பரபரப்பு... வாகன தணிக்கையில் ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள் சிக்கியது!

x