இன்று கடைசி தேதி... 10வது தேர்வானவர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு!


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று செப்.18ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது.

தமிழ்நாட்டில், சென்னை, மதுரை, கும்பகோணம், கோவை,நெல்லை, விழுப்புரம் உள்பட 8 போக்குவரத்து மண்டலங்கள் உள்ளன. கடந்த 2103ம் ஆண்டிற்கு பிறகு கடந்த 10 ஆண்டுகளாக புதிய பணியாளர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நியமிக்கப்படாமல் இருந்தனர். இதனால், போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுந்து வந்தது.

இந்நிலையில், 8ல் 6 போக்குவரத்துக் கழகங்களில் உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப்பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கான தேதி இன்றுடன் முடிவடைகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் எழுதவும், படிக்கவும் , பேசவும் தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

24 வயது பூர்த்தியான மற்றும் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து, செய்முறை மற்றும் நேர்காணல் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், தேர்வாகும் தகுதியானவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x