அதிர்ச்சி... இருமல், காய்ச்சலுக்கு சிகிச்சைபெற்ற 6 வயது சிறுமி திடீர் மரணம்!


சிறுமி ரபியா

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி அருகே இருமல், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற 6 வயது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மருத்துவர்களின் அலட்சியத்தால் சிறுமி உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி அருகே விஜயநகரை சேர்ந்தவர் தாதாபியர். இவரது மனைவி நசியா பானு. இந்த தம்பதிக்கு 6 வயதில் ரபியா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களாக இருமல் மற்றும் காய்ச்சல் இருந்து வந்துள்ளது. சிறுமியின் உடல்நிலை மோசமான நிலையில், சிறுமியை தேவனஹள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு பொதுப்பிரிவில் வைத்து சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று முன்தினம் மாலையில் சிறுமி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு சேர்க்கப்பட்ட 3 மணி நேரத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்ததும், சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் தங்களது மகள் உயிரிழந்ததாக கூறி போராட்டம் நடத்தினர்.

தவறான சிகிச்சை?

இதுகுறித்து தேவனஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் சிறுமியின் பெற்றோரிடம் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்துவதாகவும் உறுதியளித்தனர்.

x