உஷார்... நாளை தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்காது!


நியாயவிலைக் கடை

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை செப்டம்பர் 18ம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது என நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக செப்டம்பர் 17ம் தேதி பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் பல தரப்பிலும் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று பொது விடுமுறை செப்டம்பர் 18ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது நாளை தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளும் இயங்காது என்று நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.

x