ஆபரணத் தங்கம் மீண்டும் விலை உயர்வு!


தங்கம்

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று மேலும் உயர்ந்துள்ளது. இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.46,640-க்கு விற்பனையாவது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்து விற்பனையானது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் 5,820 ரூபாயாகவும், ஒரு சவரன் 46,560 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் 5,830 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 46,640 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

அதேபோல 24 கேரட் சுத்தத் தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, 6,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, 50,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

தங்கத்தைப் போலவே வெள்ளியும் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து கிராம் வெள்ளி 80.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 80,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் தங்கம் விலை கணிசமாக குறையும் என பொருளாதார வல்லுநர் தெரிவித்துள்ளனர்.

x