சென்னை- ஹவுரா ரயில் திடீரென ரத்து!


சென்னை-ஹவுரா ரயில்

தண்டவாளப் பரமாரிப்பு பணிகளுக்காக சென்னை சென்டரலில் இருந்து இரவு புறப்பட்டு ஹவுரா செல்லும் அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை-ஹவுரா ரயில்

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திரா மாநிலம் பலாசா-விசாகப்பட்டினம் மற்றும் ராயகடா-விஜயநகரம் இடையே தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மேற்கு வங்காள மாநிலம், ஹவுராவில் இருந்து டிச.3-ம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் அதிவிரைவு ரயில் (எண்-12839) ரத்து செய்யப்படுகிறது.

அதே தேதியில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7.00 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் அதிவிரைவு ரெயிலும் (12840) ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

x