மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... இன்று முதல் அமல்!


மெட்ரோ ரயில்

மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக பருவமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், மெட்ரோ ரயிலை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், சேவையில் மாற்றம் செய்துள்ளது மெட்ரோ நிர்வாகம்.

மெட்ரோவில் கூட்டம்

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’அதிகரித்து வரும் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு மற்றும் பயணிகளின் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்காகவும் இரண்டு வழித்தடங்களிலும் நெரிசல் மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் இன்று (27.11.2023) முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

x