குட்நியூஸ்... அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முடிவு நவ.27-ல் வெளியீடு!


அரசு விரைவு போக்குவரத்து பேருந்து

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முடிவு நாளை மறுநாள்( நவ.27) வெளியிடப்படவுள்ளது

அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகள்

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியிடப்படவுள்ளது. நவ.27 காலை 9.30க்கு arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் எழுத்துத் தேர்வுக்கான மதிப்பெண், விடைத்தாள் வெளியிடப்படும் என மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழக போக்குவரத்துக் கழகங்களில் 2015-ம் ஆண்டுக்குப் பிறகு ஓட்டுநா், நடத்துநா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்த நிலையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 685 ஓட்டுநா், நடத்துநா் (டி அண்ட் சி) பணிகளை நிரப்புவதற்கான அறிவிக்கை ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இந்தப் பணிகளுக்கு 10,600 போ் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்திருந்த நிலையில், 1,600 போ் மட்டுமே தோ்வெழுத தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதனிடையே, அவா்களுக்கான எழுத்துத் தோ்வு சென்னை (அண்ணா பல்கலைக்கழகம்), கோவை, திருநெல்வேலி உள்பட தமிழகம் முழுவதும் 10 இடங்களில் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது.

ஏற்கெனவே அறிவித்தபடி, பொதுத் தமிழ், பொது அறிவு மற்றும் தொழில் முறை திறனறிதல் குறித்த வினாக்கள் 100 மதிப்பெண்களுக்கு இடம்பெற்றிருந்தன. எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு உடற்தகுதி, சான்றிதழ் சரிபாா்ப்பு, திறன் தோ்வு, நோ்காணல் போன்றவை நடத்தப்படவுள்ளன. இதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

இதுவரை போக்குவரத்துக் கழகங்களில் நேரடியாகவும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் மட்டுமே ஓட்டுநா், நடத்துநா்கள் தோ்வு செய்யப்பட்ட நிலையில், முதல்முறையாக இப்பணிகளுக்கு எழுத்துத் தோ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x