கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு: உடையாத சிவப்பு நிற மண் பானை கண்டெடுப்பு


கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட சிவப்பு நிற பானை.

திருப்புவனம்: கீழடி அகழாய்வில் உடையாத சிவப்பு நிற மண் பானை கண் டெடுக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதில் 12 குழிகள் தோண்ட முடிவு செய்யப்பட்டு, இதுவரை 9 குழிகள் தோண்டப்பட்டன.

ஏற்கெனவே கண்ணாடி பாசிகள், தமிழி எழுத்து பொறிக் கப்பட்ட பானை ஓடு, உடைந்த செம்பு உலோகத்தாலான பொருட்கள், யானை தந்தத்தால் ஆன ஆட்டக் காய்கள் கண்டறியப் பட்டன.

இந்நிலையில், தற்போது உடையாத சிவப்பு நிற மண் பானை கண்டறியப்பட்டது. இது 2 அடி உயரம், 1.5 அடி அகலம் கொண்டதாக உள்ளது. பத்தாம் கட்ட அகழாய்வில் இதுவரை உடைந்த பானைகளே கிடைத்தன. இந்நிலையில் உடையாத சிவப்பு நிற பானை கண்டறியப் பட்டது தொல்லியல் அதிகாரி களிடையே மகிழ்சியை ஏற் படுத்தியது

x