இன்று சென்னைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு! பயணிகள் வரவேற்பு!


சிறப்பு ரயில்

இன்று விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கும் பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்

தொடர் விடுமுறையைக் கருத்தில் கொண்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்க, பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குவதாக அறிவித்துள்ளது. இன்று தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை 4.15 மணிக்கு நெல்லையைச் சென்றடையும்.

அதே போல் நெல்லையில் இன்று மாலை 5.50 மணிக்கு சிறப்பு ரயில புறப்பட்டு நாளை காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x