'விருப்பமில்லையா, எழுதி கொடுத்துட்டு கிளம்புங்க'... அரசு மருத்துவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை!


தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்ச்சர் மா.சுப்பிரமனியன்

விருப்பமின்றி பணியாற்றுவதைவிட வேலை வேண்டாம் என எழுதிக் கொடுத்து விட்டால் வேறு மருத்துவர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நிபுணர் பணியிடங்களுக்கான நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டார். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ள 332 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்ச்சர் மா.சுப்பிரமனியன்

அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பணிக்குச் சேரும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஓராண்டு ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். விருப்பமின்றி மருத்துவர்கள் பணியாற்றுவதை விட, எழுதிக் கொடுத்து விடலாம் என அவர் அப்போது தெரிவித்தார். அந்த இடம் காலியாக அறிவிக்கப்பட்டு, புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனை வளாகம்

அரசு மருத்துவர்கள் நியமிக்கப்படும் இடங்களில் உரிய நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை, பணிக்காலங்களின் போது முழு ஈடுபாட்டுடன் இருப்பதில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x