குட்நியூஸ்...சென்னையிலிருந்து காரைக்குடி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்...தொடங்கியது முன்பதிவு!


ரயில்

சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு கட்டண ரயில் காரைக்குடிக்கு நாளை(அக்.22) இரவு 11.30 மணிக்கு புறப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து சிறப்பு கட்டண ரயில் 24-ம் தேதி இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு எழும்பூர் வந்து சேருகிறது.

ஆயுத பூஜை கூட்ட நெரிசலைக் குறைக்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவித்துள்ளன. அதன் விவரங்கள் வருமாறு: சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு கட்டண ரயில் எண்.06039 காரைக்குடிக்கு நாளை (அக்.22) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது. இந்த ரயில் மறுநாள் காலை 9 மணிக்கு சென்றடைகிறது. இதேபோல் எண். 06040 காரைக்குடியில் இருந்து 23-ம் தேதி இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேருகிறது.

இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை வழியாகச் செல்கிறது.

ரயில்

நாகர்கோவிலில் இருந்து சிறப்பு கட்டண ரயில் எண்.06046 24-ம் தேதி இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு எழும்பூர் வந்து சேருகிறது. எழும்பூரில் இருந்து எண்.06045 சிறப்பு ரயில் 25-ம் தேதி காலை 10.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.

இந்த ரயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலில் ஏசி 2-ம் வகுப்பு படுக்கை வசதி ஒரு பெட்டி, 3-ம் வகுப்பு ஏசி படுக்கை பெட்டிகள் 5, சாதாரண 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள்-11, 2 பொதுப்பெட்டிகள் இடம்பெற்று உள்ளன. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

x