அந்தேரியில் அதிர்ச்சி... வித் அவுட்டில் சிக்கிய 2,693 ரயில் பயணிகள்... 7,14,077 ரூபாய் அபராதம்!


ரயிலில் டிக்கெட் சோதனை

'எனது டிக்கெட், எனது மரியாதை' இயக்கத்தின் கீழ் அந்தேரி ரயில் நிலையத்தில் பயணிகளிடம் இருந்து ஒரே நாளில் ரூ.7 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

பிளாட்பாரம் டிக்கெட் சோதனை

'எனது டிக்கெட், எனது மரியாதை' இயக்கத்தின் கீழ் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள அந்தேரி ரயில் நிலையத்தில் பிரம்மாண்ட டிக்கெட் பரிசோதனை நடந்தது. இதில் 199 டிக்கெட் பரிசோதகர்கள் ஈடுபட்டனர்.

அவர்கள் ரயில் நிலையத்தின் அனைத்து வாசல் பகுதி, பிளாட்பாரங்களில் நின்று சோதனையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனையில் டிக்கெட்டின்றி பயணம் செய்த, 2 ஆயிரத்து 693 பயணிகள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சத்து 14 ஆயிரத்து 77 அபராதம் வசூலிக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை தாதர் ரயில் நிலையத்தில் 195 டிக்கெட் பரிசோதகர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய டிக்கெட்டின்றி பயணம் செய்த 1,647 பயணிகள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 21 ஆயிரத்து 960 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்தேரியில் நேற்று டிக்கெட் எடுக்காத பயணிகளிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் ஒரே நாளில் ஒரு ரயில் நிலையத்தில் வசூலிக்கப்பட்ட அதிகபட்ச தொகையாகும் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

சிங்கிள் டீ குடிக்கிறதுல இவ்வளவு ஆபத்தா... உயிரை விலை பேசும் ஆய்வு முடிவுகள்!

அவர் என்ன மாமனா... மச்சானா... பிக் பாஸ் வீட்டில் தொடங்கிய முதல் சண்டை

x