மும்பையைச் சேர்ந்த 39 வயதான நாடக கலைஞர் பாஸ்கர் போஜக் மேடையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த நாடக கலைஞர் பாஸ்கர் போஜக்(39). இவர் குஜராத்தி நாடகமான 'பீ அதி கிச்சடி கதி' என்ற நாடகத்தில் இரட்டை வேடமிட்டு நடித்து வந்தார். குஜராத்தில் உள்ள தஹோத் என்ற இடத்தில் இந்த நாடகம் நேற்று முன்தினம் நடந்து கொண்டிருந்தது.
இந்த நாடகத்தில் குஜராத்தின் முன்னணி நாடகக் கலைஞரான சஞ்சய் கோரடியா முக்கிய வேடத்தில் நடித்தார். இந்த நாடகத்தை தஹோத் அனாஜ் மகாஜன் சர்வஜனிக் கல்விச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நாடகம் முடிந்ததும், அதில் நடித்த நடிகர்களை சஞ்சய் கோரடியா அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது பாஸ்கர் போஜக் மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே சரிந்து விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவருக்கு அங்கிருந்த சில மருத்துவர்கள், சிபிஆர் செய்து காப்பாற்ற முயன்றனர். அத்துடன் அவரை தஹோத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், பாஸ்கர் போஜக் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன்பின் அவரது உடல் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தன் நடித்த நாடக மேடையிலேயே நாடகக் கலைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கடவுளே என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார்... நடிகை குஷ்பு நெகிழ்ச்சி!
அதிர்ச்சி... 4,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை!
டாஸ்மாக் கடையை மூடுங்க... திமுக எம்.எல்.ஏ காலில் விழுந்து கதறிய இளம்பெண்!
நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் திடீர் சந்திப்பு!
நாங்க மட்டும் ஓட்டு போடலையா? திமுகவுக்கு எதிராக கொந்தளித்த பெண்கள்!