தஞ்சாவூர்
திருச்சி செல்லும் பேருந்தில்...
“ஹலோ... அதான் மாஸ்க் போடச் சொல்லி கவர்மென்டே சொல்லிடுச்சுல்ல... அப்புறமும் மாஸ்க்கே போடாம வந்து லொக்கு... லொக்குன்னு இருமுறீங்களே?”
“நீங்கதான் மாஸ்க் போட்டிருக்கீங்களே... அப்புறம் ஏங்க கவலைப்படறீங்க?”
(சற்று நேரத்தில் மாஸ்க் போட்டவர் இருமுகிறார்)
“நீங்க கூடத்தான் மாஸ்க் போட்டிருக்கீங்க... இருந்தாலும் இருமுறீங்களே?!"
“பார்த்தீங்களா... அதுக்குள்ளே எனக்கும் பரவிடுச்சு போல! சொன்னா கேட்கிறீங்களா?”
(மாஸ்க் போடாதவர் பதறுகிறார்!)
- தே.ராஜாசிங்ஜெயக்குமார்
தஞ்சாவூர்
சிதம்பரம்
மக்கள் மருந்தகம் ஒன்றில்...
“என்ன சார் பத்து ரூபா மாத்திரையை ஒரு ரூபாய்க்குத் தர்றீங்க... பவர் அப்படியேதானே இருக்கும்?”
“ஒண்ணு சொல்றேன், தப்பா நினைச்சுக்காதீங்க... நம்மாட்களுக்கு ஒரு ரூபாய் பொருளை இருபது ரூபாய் கொடுத்து வாங்குனாத்தான் தூக்கம் வரும். கவர்மென்ட் நல்ல மருந்தை சீப் ரேட்டுக்குக் கொடுக்குது. இதுலயும் உங்க சந்தேகப் புத்தியைக் காட்டணுமா?”
-பொ.பாலாஜிகணேஷ்,
சிதம்பரம்
வேளாங்கண்ணி
டீக்கடை ஒன்றில் இருவர்...
“என்னண்ணே வாராவாரம் சேவிங் பண்ணி க்ளீனா இருப்பீங்க... திடீர்னு தாடி, மீசையுமா?!"
“அதான் புது ஜிஎஸ்டி-யில பிளேடும் 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகிடுச்சே!"
“அப்ப இனிமே மோடிக்குப் போட்டியா தாடியை வளர்த்துக்கிட்டே இருக்கப்போறீங்க... அப்படித்தானே?”
(டீக்கடையில் சிரிப்பலை!)
-சு.மூன்சுதாகரன்,
வானவன்மகாதேவி