திருச்சி
பெட்ரோல் பங்க் ஒன்றில்...
“சேமிப்புதான் சார் இந்தக் காலத்துல ரொம்ப முக்கியமான விஷயம்.”
“ஏன் இதை என்கிட்ட சொல்ற?”
“தினமும் 50 ரூபாய்க்குப் பெட்ரோல் போடுறீங்களே... கூடிய சீக்கிரம் பெட்ரோல் விலை 120 ஆகப் போகுது. அதான் சொன்னேன்.”
“அப்படி ஒரு நிலைமை வரும்போது நடராஜா டிராவல்ஸ்ல போவேன். சர்தான் போய்யா!”
-சிவம்,
திருச்சி
தஞ்சாவூர்
காலை வாக்கிங்கில் இருவர்...
“என்னய்யா ஹெட்போன் மாட்டிக்கிட்டு பாட்டெல்லாம் கேட்டுக்கிட்டு... புதுசா இருக்கு?!”
“குளிர் காத்துக்காகக் காதிலே போடறது என்கிட்டே இல்லே. அதான் இப்படி காதைக் கவர் பண்றதுக்காக..."
"ஆஹா... நவீன கண்டுபிடிப்புகளை நாசூக்கா யூஸ் பண்ற யூத் நீ மட்டும்தான்டா!”
- தே.ராஜாசிங் ஜெயக்குமார்
தஞ்சாவூர்
நாகர்கோவில்
ஒரு டீக்கடையில்...
“என்னப்பா... 8 ரூபா வித்த வடையை ஒரேயடியா 10 ரூபா ஆக்கிட்டே?!”
“என்ன பண்றது? உக்ரைன் போரால கச்சா எண்ணெய்யெல்லாம் விலை ஏறுதுல்ல?!”
“என்னவோ கச்சா எண்ணெய்ல வடை சுடுற மாதிரில்ல அலட்டிக்கிற!”
“இதெல்லாம் பொருளாதாரப் பிரச்சினைப்பா. புரிஞ்சிக்க மாட்டே நீ!”
- எ.முகமது ஹுமாயூன்
நாகர்கோவில்
வேலூர்
டாஸ்மாக் அருகே இருவர்...
“தலைவா! கடைசியில 'தளபதி' எங்க தலையில கை வெச்சிட்டாரே?!”
“சரக்கு விலை ஏத்தினதைப் பத்திதானே சொல்றே?”
“ஆமாம்பா. இனி சைடு டிஷ்ஷே இல்லாம சரக்கு அடிச்சாதான் பொழப்பு ஓடும்!"
“அவனவன் பெட்ரோல், டீசல் விலையப் பத்தி கவலைப்படறப்போ... எப்படிடா நீ மட்டும் இவ்ளோ அசல் ‘குடிமக’னாவே இருக்கே?!”
- மூ. மோகன்,
வேலூர்