மாங்கனி திருவிழா: காரைக்காலில் ஜூலை 21-ல் உள்ளூர் விடுமுறை


பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி: மாங்கனி திருவிழாவையொட்டி காரைக்காலில் வரும் 21-ம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் பொது விடுமுறை அளிக்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆண்டுதோறும் காரைக்காலில் நடைபெறும் பிரசித்திபெற்ற மாங்கனித் திருவிழா இந்த ஆண்டு வரும் ஜூன் 21 அன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று அமைச்சர் திருமுருகன், முதல்வர் ரங்கசாமியிடம் இன்று கோரிக்கை வைத்தார்.

இக்கோரிக்கையை ஏற்று வரும் 21.06.2024 அன்று காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் பொது விடுமுறை அளிக்க முதல்வர் ரங்கசாமி காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.