நிழற்சாலை


மழலையும் கேள்வியும்

பொய் சொன்ன குற்றத்திற்காக
நட்சத்திரங்களை
எண்ணிச் சொல்லச் சொல்லும்
தண்டனையை
குழந்தைக்குக் கொடுத்தாள் தாய்
தப்பிப்பதற்காக...
ஏதோ ஒரு எண்ணைச் சொல்லி
மறுபடியும் பொய் சொன்னது
குழந்தை
உறங்கிக்கொண்டே
சிரிக்கும் குழந்தை
எதைக் கண்டிருக்கும்
விழித்த பிறகு கேட்டாலும்
அதற்குச் சொல்லத் தெரியாது
என்பதால்
விடை தெரியாமலேயே
விடை பெற்றுக்கொள்கிறது
அந்தக் கேள்விக்கான பதில்.

- வீரன்வயல் வீ.உதயக்குமாரன்

*****************************

x