அம்மிணி ஆசிரியர் ஆயிட்டாங்க..!


ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

மகனாரும் அம்மிணியும் வெகு நேரமாய் பேசிக்கிட்டிருந்தாங்க. அம்மிணி தான் பேசுனாங்க. நடு நடுவுல மகனார் ம்ம், ஆங்னு சவுண்டு மட்டும்.

“மே ஐ கம் இன்”னு சிரிச்சுக்கிட்டே கேட்டேன்.  “வந்து குழப்பி விடறதுக்கா?”ன்னு அம்மிணி பவுன்சர் போட்டாங்க. மகனார், “அப்பாவை கவுரவ ஆசிரியராப் போட்டுரலாமே”னு முனகினார்.

கவுரவ ஆசிரியரா... இவங்க என்ன சொல்றாங்க. எனக்குத் தலையே சுத்துச்சு. அம்மிணி இப்போ சிரிச்சாங்க.  “அவருக்குத் தெரியாதுல்ல. நான் பத்திரிகை நடத்தப்போறேன்”னு.

x