திராவிட அரசியல் தியாகி நான்!- திகிலூட்டிய கமல்


சானா
readers@kamadenu.in

டிசம்பர் 31 இரவில், பறக்கும் பைக் மீதேறி வானில் வலம் வந்துகொண்டிருந்தான் பாச்சா. புத்தாண்டைக் கொண்டாடப் பதுங்கிப் பதுங்கிச் சென்றுகொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து, பைக்கே பரிதாபப்பட்டு ‘உச்...’ கொட்டியது.

“இந்தக் கரோனா வந்தாலும் வந்துச்சு. மனுஷங்க சந்தோஷத்தைக்கூட சாமானியத்துல அனுபவிக்க முடியலையே” என்று அலுத்துக்கொண்ட பைக்கைப் பார்த்துச் சிரித்த பாச்சா, “இதெல்லாம் ஒரு சோகமா? சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் பொங்கிப் பொங்கி அழுவுற காட்சிகளைப் பார்த்தா, சோகம் தாங்காம நீயே கதறிடுவே” என்றான்.

“அப்படின்னா போயஸ் கார்டன் பக்கம் ஒருக்கா போய்ப் பார்த்துடுவோம்” என்றபடி, வேகமெடுத்தது பைக்.

x