வாக்கப்பட்டவள்- ஐ.கிருத்திகா


பள்ளிக்கூடம் விட்டுக் குழந்தைகள் பட்டாம்பூச்சிகளாய் வெளியே வர,செண்பகம் ஆகாஷைத் தேடினாள். எங்கும் சிவப்பும் வெள்ளையுமாகத் தெரிய ஆகாஷைக் கண்டுபிடிப்பது சற்று சிரமமாகத்தான் இருந்தது.

"பையன சீக்கிரம் தேடுக்கா. எனக்கு நாலரைக்கு ஒரு சவாரி இருக்கு.போகலேன்னா சொளையா எரநூறு ரூவா கை நழுவிடும்."

ஆட்டோக்காரன் வேறு அவசரப்படுத்தினான்.

"இருப்பா, பறக்காத...” என்றபடி கண்களால் துழாவிய செண்பகம் சட்டென்று பிரகாசமானாள்.

x