கடலினை மறைக்கும் சன்னலாய்...


கணேசகுமாரன்

ரொட்டிகளை விளைவிப்பவன்
- ஸ்டாலின் சரவணன்
கவிதைத் தொகுப்பு
விலை: 80 ரூபாய்
வெளியீடு:
உயிர்மை பதிப்பகம்,
தேனாம்பேட்டை, சென்னை 18
தொடர்புக்கு: 9003218208

தீவிர சிற்றிதழ் தளத்துக்கான எழுத்துக்கும் வெகுஜன எழுத்துக்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொண்ட வகையில் எளிதாக வெல்கிறார் நூலாசிரியர் ஸ்டாலின் சரவணன். ஒன்றுக்கு மேற்பட்ட ஆளுமைகளுக்கு புத்தகத்தை சமர்ப்பணம் செய்வது ஒன்றும் புதிதல்ல. 

ஆனாலும் அவர்களுக்கான வெளியைப் புரிந்துகொண்டு புத்தகத்தை மூன்றாகப் பிரித்து வழங்கியிருப்பது நன்று. அதேபோல் ஒவ்வொரு சமர்ப் பணத்துக்கு முன்னாலும் எழுதப்பட்டிருக்கும் ‘சிறுகுறிப்பு வரைதல்’, தொகுப்பில் பேசப்படாத கவிதை மொழியிலெல்லாம் பேசிப்போகிறது. 

x