பேசிக்கிட்டாங்க...


திருநெல்வேலி

ஏரல் பஸ்ஸில் இருவர்....
``யோவ் மச்சான் எப்படி இருக்கீரு! என்னவோய் அதுக்குள்ள தலயெல்லாம் நரச்சுப் போச்சு?"
``ஆமாய்யா! வயசு அம்பது தாண்டிட்டுல்லா.அதான் நரைச்சுட்டு''
``வேய்! எனக்கும் உம்ம வயசுதான ஆச்சு.ஒத்த முடி நரைச்சிருக்கா பாரும்''
``அப்படியா! அப்ப நல்ல டாக்டரா போய் பாரும்''
``என்னவே! பயம் காட்டுதீரு''
``நம்ம வீட்டுல ஒரு பொண்ணு பதினஞ்சு வயசு ஆன பிற்பாடும் வயசுக்கு வரலன்னா டாக்டர்கிட்ட காட்டுவமா இல்லியா! அதமாறிதான்வே இதுவும். 
காலாகாலத்துல நடக்க வேண்டியது நடக்கணும்வே. இல்லன்னா சங்கட்டம்தான்!''
``என்னவே! இப்படி சொல்லுதீரு! நேத்துதான் சுகர் டாக்டருட்ட போய் 500 தெண்டம் அழுதிருக்கு. இனிமே இதுவேறயா?'' 
- நாகர்கோவில், சாதிக் குல்.

நாகர்கோவில்

பஸ் ஸடாப்பில் நண்பர்கள் இருவர்...
``மக்கா! ஸ்கூட்டர்ல போற அந்தப் பொண்ண பார்த்து கையால ஏதோ சிக்னல் காட்டுற! அடி வாங்க ஆசையா?''
``அட மாக்கான்! கைவிரல குவிச்சு விரிச்சுக் காட்டுனா வண்டியில ஹெட்லைட் எரியுதுன்னு அர்த்தம். இந்த சிக்னல் கூட தெரியாம என்கூட அலையுறியே... எனக்கு வெக்கமா இருக்கு''
``அடி செருப்பால! இப்ப வர்ர வண்டியிலே ஹெட்லைட்ட அணைக்கவே முடியாது. இது தெரியாம சிக்னல் காட்டுற நீ மாக்கானா... இல்ல நான் மாக்கானா..?
``சரி...சரி...விடு...பஸ் வந்துட்டு.''
- நாகர்கோவில், சாதிக் குல்.

x