பேசிக்கிட்டாங்க..!


சீர்காழி

மணிக்கூண்டு அருகே இரண்டு இளைஞர்கள்...

"என்ன மாப்ள... எஸ்பிஐ அக்கவுன்ட்ல ஒரு நாளைக்கு இருபதாயிரத்துக்கு மேல கேஷ் வித்டிராயல் பண்ண முடியாதுன்னு சொல்லியிருக்காங்க..."
"நீ என்ன அம்பானியா, அதானியா? பிசினஸ் பாதிச்சுடும்னு அதைப் பத்தி கவலைப்படறதுக்கு? மினிமம் பேலன்ஸ்கூட வெக்காம சரக்கடிக்க இருக்கற நூறு இருநூறு ரூபாயையும் ஏடிஎம்-ல உருவற குடிகார பயதானே நீ... ஏன் வீணா கவலைப்படறே..?"
"அதுக்கு இல்ல மச்சான்... பப்ளிக் பாதிக்கக் கூடாதுல்ல. அதான்..!"
''இப்படி எதையாவது உளறிக் கொட்டி தேசத்துரோக வழக்குல ஜெயிலுக்குப் போயிடாத... பொழுது சாயப் போகுது. போயி உன் வேலையைப் பாரு..."
- சீர்காழி, வி.வெங்கட்.

திருச்செந்தூர்

x