பேசிக்கிட்டாங்க..!


புதுக்கோட்டை

டிவிஎஸ் கார்னர் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில்..வாடிக்கையாளரும் சர்வரும்...
(இலையில் இரண்டு இட்லிகளை வைத்துவிட்டு சாம்பார் ஊற்றுகிறார் சர்வர். அது இலை முழுக்க பாய்ந்து ஓடுகிறது...)
“என்னப்பா சப்ளையர்... இந்த சாம்பார் வெள்ளத்துக்கு அணைகட்ட இன்னும் நாலு இட்லி கொடுப்பா...”
“இப்படி தண்ணியா வைக்கிற சாம்பாரையே நீங்க எல்லாம் டி.எம்.சி.
கணக்குல காலி பண்ணுறீங்க... நாங்க மட்டும் கொஞ்சம் கெட்டியா வச்சா அவ்வளவுதான்..! கடல் கணக்குல தேவைப்படும்..!”
“சும்மா சொல்லக்கூடாது... உன்னையும் உன் முதலாளியையும் சாம்பார் மேலாண்மை வாரியம்னு ஒண்ணு அமைச்சு அதுக்கு தலைவரா போடணும்யா... போ..!”
- பழ.அசோக்குமார், புதுக்கோட்டை

தஞ்சாவூர்

டீக்கடை ஒன்றில் இருவர்...
“பிக்பாஸ்ல நல்ல செய்தியெல்லாம் சொல்றாங்க! கமல் வேண்டியவங்களுக்கு வோட்டு போடாட்டி வேண்டாதவங்கதான் ஆள வருவாங்கன்னு, சென்ட்ராயன் ஐஸ்வர்யாவை வெச்சு சொல்றார்!”
“அப்பாவி சென்ட்ராயனுக்கு ஆப்புவெச்சு, அடாவடி ஐஸ்வர்யாவைக் காப்பாற்றி, பிக்பாஸ் என்னசொல்ல வர்றார்!”
“தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் தர்மம் மறுபடி வெல்லும்னு சொல்ல வர்றார்!”
“இப்ப சூது கவ்வினா தர்மம் எப்ப வெல்லுமோ தெரியாது ஓடிப்போயிடு நாயே!”
- தஞ்சாவூர், தே.ராஜாசிங் ஜெயக்குமார்

x