ஆங்கில இலக்கியத்துக்கு விலையுயர்ந்த பரிசு


ஜேசிபி நிறுவனம் ஆங்கில நாவல் எழுதும் இந்தியர்களை மிகப் பெரிய அளவில் கவுரவிக்கப்போகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த இந்திய ஆங்கில நாவலுக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். இந்தியாவிலேயே இலக்கியத்துக்கான விலையுயர்ந்த பரிசாக இது இருக்கும்.

பரிசு பெறும் நாவல் வேறு மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டதாக இருந்தால் மொழிபெயர்ப்பாளர் ரூ.5 லட்சம் பெறுவார். குறும்பட்டியலில் இடம்பெற்ற நாவல்கள் அனைத்துக்கும் ஒரு லட்சம் பரிசு உண்டு. இந்த ஆண்டுக்கான பரிசுக்கு மே 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்தியப் பதிப்பகங்கள் மட்டுமே இந்தப் பரிசுக்கு விண்ணப்பிக்க முடியும். நவம்பரில் பரிசு பெற்ற நாவல் அறிவிக்கப்படும்

x