பாலு மகேந்திரா பெயரில் நூலகம்


சென்னையில் 5,000 தமிழ்ப் புத்தகங்களுடன் புதிய நூலகம் ஒன்றைத் தொடங்கவிருக்கிறார் எழுத்தாளர், இயக்குநர் அஜயன் பாலா!

ஏப்ரல் 14 அன்று திறக்கப்பட உள்ள இந்த நூலகத்துக்கு தனது குரு, இயக்குநர் பாலு மகேந்திராவின் பெயரை சூட்டியிருக்கிறார். கதை, கவிதை, கட்டுரை நூல்களுடன், சினிமா உதவி இயக்குநர்களுக்கும் பயன்படும் வகையில் சிறந்த உலகப் படங்கள் மற்றும் தமிழ்ப் படங்களும் இந்த நூலகத்தில் இடம்பெறவிருக்கின்றன. நூல்களைக் கொடையாக அளிக்க விரும்புபவர்கள் ajayanabala@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ 9884060274 எனும் எண்ணிலோ அஜயன் பாலாவைத் தொடர்புகொள்ளலாம்.

x