ஷங்கரையே மிரட்டும் டிஜிட்டல் சவால்!: எப்போது கிளம்புவான் எந்திரன்


எந்திரனைப் போல மூன்று மடங்கு செலவில், இந்தியாவிலேயே மிகப் பிரம்மாண்டமான படமாக 2.0-ஐ எடுக்கிறார் இயக்குநர் ஷங்கர். ரூ.450 கோடி பட்ஜெட், ரஜினி, அக் ஷய்குமார் என்று ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் படம். ‘பாகுபலி’யை ஊதித்தள்ளும் அளவுக்கு உச்சம் தொடும் நோக்கத்தோடு, படத்தை 3டி-யில் படமாக்கினார்கள்.

‘ஃபர்ஸ்ட் லுக்’ வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேலாகவும், பாடல்கள் வெளியாகி 5 மாதங்களும் ஆகிவிட்டன. ஆனால், படம் வெளியாகும் தேதி நான்காவது முறையாகத் தள்ளிப்போயிருக்கிறது. 2017 தீபாவளிக்கு என்று அறிவிக்கப்பட்ட படம், பிறகு 2018 ஜனவரி 26, அடுத்து ஏப்ரல் என்று தள்ளிவைக்கப்பட்டு, இப்போது ஆகஸ்ட்டில் வந்து நிற்கிறது. இருக்கிற சிக்கலைப் பார்த்தால், ‘வருகிற தீபாவளிக்கு படம் வெளியானாலே பெரிய விஷயம்’ என்று வருத்தத்தோடு சொல்கிறார்கள் 2.0 குழுவினர்.

அப்படி என்னதான் பிரச்சினை?

x