​வாக்கு வங்கி வைரஸை பரப்​பு​கிறது காங்​கிரஸ்: பிரதமர் நரேந்​திர மோடி குற்​றச்​சாட்டு


ஹிசார்​/ய​மு​னாநகர்: வாக்கு வங்கி வைரஸை காங்​கிரஸ் பரப்பி வரு​கிறது என்று பிரதமர் மோடி குற்​றம் சாட்டி உள்​ளார். ஹரி​யா​னா​வின் ஹிசார் விமான நிலை​யத்​தில் ரூ.410 கோடி​யில் புதிய முனை​யம் கட்​டப்பட உள்​ளது. இந்த கட்​டிடத்​துக்கு பிரதமர் நரேந்​திர மோடி நேற்று அடிக்​கல் நாட்​டி​னார்.

ஹிசா​ரில் இருந்து அயோத்​திக்கு நேரடி விமான சேவையை தொடங்கி வைத்​த அவர் பேசி​ய​தாவது: நாடு முழு​வதும் இன்று அம்​பேத்​கர் பிறந்த தினத்தை கொண்​டாடு​கிறோம். இது 2-வது தீபாவளி பண்​டிகை போன்​றது. மத்​தி​யில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி கடந்த 11 ஆண்​டு​களாக அம்​பேத்​கர் காட்​டிய வழி​யில் ஆட்சி நடத்தி வரு​கிறது. குறிப்​பாக ஒடுக்​கப்​பட்​டோர், ஏழைகள், பழங்​குடிகள், பெண்​களின் முன்​னேற்​றத்​துக்​காக மத்​திய அரசு அயராது பாடு​பட்டு வரு​கிறது.

அம்​பேத்​கரின் கொள்​கைகளை அழிக்க காங்​கிரஸ் விரும்​பியது. அவர் வரையறுத்த அரசி​யலமைப்பு சட்​டத்​தை​யும் அழிக்க அந்த கட்சி முயற்சி செய்​தது. நாடு முழு​வதும் சமத்​து​வத்தை நிலை​நாட்ட அம்​பேத்​கர் விரும்​பி​னார். ஆனால் அவரது கொள்​கைக்கு நேர்​மாறாக வாக்கு வங்கி வைரஸை காங்​கிரஸ் பரப்பி வரு​கிறது.

கடந்த 2014-ம் ஆண்​டுக்கு முன்பு நாடு முழு​வதும் 74 விமான நிலை​யங்​கள் மட்​டுமே இருந்​தன. இது 150-ஐ தாண்​டி​யுள்​ளது. உதான் திட்​டத்​தில் 600 வழித்​தடங்​களில் விமான சேவை​கள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன. கர்​நாட​கா​வில் காங்​கிரஸ் ஆட்சி நடத்தி வரு​கிறது. இதன் ​காரண​மாக அந்த மாநிலத்​தில் எஸ்​சி, எஸ்​டி, ஓபிசி பிரி​வினரின் உரிமை​கள் பறிக்​கப்​பட்டு உள்​ளன. அங்கு மதத்​தின் அடிப்​படை​யில் இட ஒதுக்​கீடு வழங்​கப்​பட்​டிருக்​கிறது. காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் அடிப்​படை​வா​தி​களுக்கு ஆதர​வாக வக்பு சட்​டத்​தில் திருத்​தங்​கள் செய்​யப்​பட்​டன. இதன்​மூலம் அம்​பேத்​கரை அந்த கட்சி அவம​தித்​தது.

முஸ்​லிம்​களின் நலன்​களில் அக்​கறை கொண்​டிருக்​கிறோம் என்று காங்​கிரஸ் கூறி வரு​கிறது. அப்​படி​ யென்​றால் அந்த கட்​சி​யின் தலை​வ​ராக முஸ்​லிமை நியமிக்​காதது ஏன்? இவ்​வாறு அவர் பேசி​னார்.

அனல் மின் நிலை​யம் விரி​வாக்​கம்: ஹரி​யா​னா​வின் யமு​னாநகரில் தீன்​பந்து சோட்​டு​ராம் அனல் மின் நிலை​யம் செயல்​படு​கிறது. இந்த அனல் மின் நிலை​யத்​தில் 800 மெகா​வாட் திறன் கொண்ட புதிய அலகை கட்ட பிரதமர் நரேந்​திர மோடி நேற்று அடிக்​கல் நாட்​டி​னார். அங்கு உயிரி எரி​வாயு ஆலைக்​கும் அவர் அடிக்​கல் நாட்​டி​னார். ரூ.1,070 கோடி​யில் கட்​டப்​பட்ட ரேவாரி புறவழிச் சாலையை அவர் திறந்து வைத்​தார்.

x