தொண்டருக்கு சிபிஆர் சிகிச்சை செய்து காப்பாற்றிய எம்எல்ஏ


பத்ராசலம்: தெலங்​கானா மாநிலம், பத்​ராசலத்​தில் நேற்​று​முன்​தினம் அம்​மாநில வேளா்ண் துறை அமைச்​சர் தும்மல நாகேஸ்வர ராவ் சுற்​றுப்​பயணம் மேற் கொண்​டார். அவருடன் பத்ரா சலம் சட்​டப்பேரவை காங்​கிரஸ் உறுப்​பினர் டாக்​டர் வெங்​கட்ரா வும் உடன் இருந்​தார்.

அப்​போது, காங்​கிரஸ் தொண்​டர் ஒரு​வர் மாரடைப்பு ஏற்​பட்டு கீழே சாய்ந்​தார். இதனை பார்த்த எம்​.எல்.ஏ டாக்​டர் வெங்​கட்​ராவ், அவரின் மார்​பின் நடு​வில் தனது இரண்டு கைகளை​யும் சேர்த்து தொடர்ந்து அழுத்​தம் கொடுத்து சிபிஆர் சிகிச்சை அளித்​தார். இதன் காரண​மாக சில நிமிடங்​களி​லேயே அந்த நபர் கண் திறந்து பார்த்​தார். உடனடி​யாக பத்​ராசலம் மருத்​து​வ​மனைக்கு அவரை அனுப்பி வைத்​தனர்​.

x