மாநிலங்களவை தலைவருக்கு எதிரான கருத்து: மன்னிப்பு கோரினார் கார்கே


புதுடெல்லி: பு​திய கல்விக் கொள்கை மற்​றும் தொகுதி மறு​வரையறை தொடர்​பான விவாதம் மாநிலங்​களவை​யில் நேற்று நடை​பெற்​றது.

அப்​போது, பேசிய எதிர்க்​கட்சி தலை​வரும், காங்​கிரஸ் தேசிய தலை​வரு​மான கார்கே, காலை​யில் தான் பேசி​யபோது கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் இல்​லாத​தால் தனது கருத்​துகள் முழு​மையடைய​வில்​லை. எனவே, தன்னை மீண்​டும் பேச அனு​ம​திக்க வேண்​டும் என்று அவை துணைத் தலை​வரிடம் முறை​யிட்​டார். ஆனால், இதற்கு அனு​மதி அளிக்க ஹரிவன்ஷ் தயங்​கியதையடுத்​து, ‘‘இது சர்​வா​தி​கார போக்​கு” நான் பேச வேண்​டும். அதற்கு தயா​ராக வந்​துள்​ளோம் என்று அவைதலை​வரை நோக்கி சர்ச்​சைக்​குரிய வகை​யில் கருத்து தெரி​வித்​தார்.

கார்​கே​வின் பேச்​சுக்கு ஜே.பி.நட்டா உள்​ளிட்ட பாஜக எம்​.பி.க்கள் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இதுகுறித்து ஜே.பி. நட்டா கூறுகை​யில், ‘‘நீண்ட அனுபவம் வாய்ந்த எதிர்க்​கட்சி தலை​வர் இது​போன்ற நாடாளு​மன்​றத்​துக்கு புறம்​பான மொழியை பயன்​படுத்​தி​யதை ஏற்​றுக்​கொள்ள முடி​யாது. எனவே, அவர் தனது கருத்​துகளை திரும்​பப்​பெற்று மன்​னிப்பு கோர வேண்​டும்” என்​றார். இதையடுத்து கார்கே பேசும்போது, ‘‘நான் கூறிய கருத்​துகள் மத்​திய அரசின் கொள்​கைக்கு எதி​ரானதே தவிர, அவைத் தலை​வருக்கு எதி​ரானது அல்ல. எனது கருத்து யாரை​யா​வது புண்​படுத்​தி​யிருந்​தால் அதற்​காக மன்​னிப்பு கேட்​டுக் கொள்​வ​தோடு, அந்த கருத்தை திரும்​பப் பெற்​றுக் கொள்​கிறேன்’’ என்றார்.

x