மத்திய பெண் அமைச்சரின் மகளுக்கு மகாராஷ்டிராவில் பாலியல் துன்புறுத்தல்


ரக்சா காட்சே

மும்பை: ம​காராஷ்டிர மாநிலத்​தில் மத்திய பெண் அமைச்​சரின் மைனர் மகளுக்கு பாலியல் துன்​புறுத்தல் அளிக்​கப்​பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்​தி​யுள்​ளது.

பாஜக அமைச்​சர​வை​யில் இளைஞர் விவகாரம் மற்றும் விளை​யாட்டுத் துறை இணை அமைச்​சராக பதவி வகிப்​பவர் ரக்சா காட்சே. மகாராஷ்டிரா​வில் இவரது மைனர் மகள் மகா சிவராத்​திரி நிகழ்ச்​சிக்கு சென்​றிருந்​த​போது பாலியல் ரீதி​யில் துன்​புறுத்​தலுக்கு ஆளானதாக கூறப்​படு​கிறது. இதையடுத்து, அவர் தனது பாஜக ஆதரவாளர்​களுடன் சென்று காவல்​நிலை​யத்​தில் நேற்று புகார் அளித்​தார்.

இதுகுறித்து ரக்சா செய்தி​யாளர்​களிடம் கூறுகை​யில், ‘‘மகாராஷ்டிரா​வின் ஜல்கான் மாவட்​டத்​தின் கோதாலி கிராமத்​தில் ஒவ்வொரு ஆண்டும் கொண்​டாடப்​படும் மகாசிவ​ராத்​திரி விழா​வில் பங்கேற்க எனது மகள் தோழிகளுடன் சென்​றுள்​ளார். அங்கிருந்த ஆண்கள் சிலர்எனது மகளுக்கு பாலியல் ரீதி​யில் தொந்​தரவு கொடுத்​துள்ளனர். ஒரு மத்திய அமைச்​சரின் மகளுக்கே இந்த நிலை என்றால் மகாராஷ்டிரா​வில் சாதாரண பெண்கள் பாது​காப்பாக இருக்​கின்​றனரா என்ற கேள்வி எழுகிறது. நான் ஒரு தாயாக எனது மகளுக்கு நியாயம் கேட்டு காவல்நிலை​யத்​தில் புகார் அளித்​துள்ளேன். மத்திய அமைச்​சராகவோ அல்லது எம்.பி.​யாகவோ நான் இந்த புகாரை கொடுக்க​வில்லை. மாநில அரசு சட்டத்தை கடுமையாக அமல்​படுத்தி இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வேண்​டும்” என்றார்.

இதுகுறித்து துணை காவல் கண்காணிப்​பாளர் குஷாந்த் பிங்டே கூறுகை​யில், ” இந்த வழக்​கில் சம்பந்​தப்​பட்​ட​வர்கள் பல பெண்​களிடம் தவறாக நடந்து கொள்ள முற்​பட்​டுள்​ளனர். தடுக்க வந்த பாது​காவலர்​களை​யும் அவர்கள் தாக்கி​யுள்​ளனர். இந்த வழக்​கில் ஏழு பேரின் பெயர்கள் சேர்க்​கப்​பட்​டுள்ளன. அதில், ஒருவர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்” என்றார்.

பாஜக தலைமையிலான மகாராஷ்டிர அரசின் சட்ட ஒழுங்கு நிலை குறித்து அக்கட்​சி​யைச் சேர்ந்த மத்திய பெண் அமைச்சர் ஒருவரே கேள்​வியெழுப்​பி​யுள்ள நிலை​யில் எ​திர்க்​கட்​சியான ​காங்​கிரஸ் இந்த விவ​காரத்தை தீ​விரமாக கை​யிலெடுக்​கும் என்று எ​திர்​பார்​க்​கப்​படுகிறது.

x