பாபர் மசூதி அறிவித்த டிஎம்சி.க்கு பதிலாக ராமர் கோயில் கட்டுவதாக பாஜக அறிவிப்பு: மே.வங்கத்திற்கு மாறுகிறதா அயோத்தி அரசியல்?


கோப்புப் படம்

புதுடெல்லி: மே.வங்​கத்​தில் முஸ்​லிம்கள் அதிகம் வாழும் முர்​ஷி​தாபாத் மாவட்டம் பெல்​தங்​கா​வில் பாபர் மசூதியை போன்று ஒரு மசூதி கட்டப்​படும் என ஆளும் டிஎம்சி எம்எல்ஏ ஹுமா​யுன் கபீர் கடந்த வாரம் அறிவித்​தார். ‘‘நூறு பேர் கொண்ட அறக்​கட்டளை அமைத்து 2 ஏக்கரில் மசூதி கட்டப்​படும். இதற்கு ரூ.1 கோடி நன்கொடை தருவேன்’’ என்றும் அவர் கூறினார்.

இதற்கு பதிலடியாக அதே மாவட்​டத்​தின் பெர்​ஹாம்​பூரில் அயோத்​தி​யில் இருப்பது போன்று ராமர் கோயில் கட்டப்​படும் என பாஜக மூத்த தலைவர்​களில் ஒருவரான அக்னிமித்ரா பால் அறிவித்​துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்​போது, ‘‘மசூ​திக்கு இணையாக எனக் கருதா மல் பாபர் மசூதியை போல் ராமர் கோயிலும் கட்டப்​படு​வதாக எடுத்​துக்​கொள்ள வேண்​டும். அயோத்தி ராமர் கோயி​லின் முதல் வருட நிறை​வில் ஜனவரி 22-ல் நாங்கள் ராமர் கோயில் கட்டும் பணியை தொடங்​கு​வோம். இக்கோ​யில் ரூ.10 கோடி செலவில் கட்டப்​படும்” என்றார்.

முன்னதாக டிஎம்சி எம்எல்ஏ ஹுமாயூன் கபீர் தனது அறிவிப்​பில், “1992-ல் பாபர் மசூதி இடிக்​கப்​பட்டு 30 வருடங்​களாகி​யும் இன்னும் மீண்​டும் கட்டப்​பட​வில்லை. இதனை 35 சதவீத முஸ்​லிம்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டி முர்​ஷி​தாபாத்​தில் கட்டு​வோம். இதற்காக நிலம் அல்லது மானியம் கேட்டு மத்திய, மாநில அரசுகளை அணுக மாட்​டோம்’’ என்றார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்​தி​யில் பாபர் மசூதி - ராமர் கோயில் வழக்கு, உச்ச நீதி​மன்றம் கடந்த 2019, நவம்பர் 9-ல் அளித்த தீர்ப்​பால் முடிவுக்கு வந்​தது. இத​னால் உ.பி.​யில் ​முடிவுக்கு வந்த அயோத்தி அரசி​யல், மேற்கு வங்​கத்​திற்கு ​மாறுகிறதா எனும் கேள்வி எழுந்​துள்​ளது.

x