இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; வருங்கால கணவர் முன்பு வீடியோ எடுத்த கொடூரம்


புவனேஸ்வர்: ஒடிசாவின் நயாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டில் 21 வயது பெண், அவரது வருங்கால கணவன் முன்பு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கடந்த அக்டோபர் 20 ஆம் தேதியன்று மாலை 21 வயது இளம்பெண் தனது வருங்கால கணவருடன் ஃபதேகர் ராமர் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் பித்தகை காடு அருகே இருவரையும் வழிமறித்து, வலுக்கட்டாயமாக காட்டுக்குள் அழைத்துச் சென்று அப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

மேலும், அவர்கள் இந்த சம்பவத்தை மொபைல் போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஃபதேகர் காவல் நிலையத்தில் நேற்று இது குறித்து புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்கான செயல்முறை நடந்து வருகிறது என்றும், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

x